ஆப்நகரம்

சூரியனை கடந்தது புதன் கோள்!

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே புதன் கோள் கடந்த அரிய வானியல் நிகழ்வை, சென்னை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

TNN 9 May 2016, 10:14 pm
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே புதன் கோள் கடந்த அரிய வானியல் நிகழ்வை, சென்னை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
Samayam Tamil mercury transit when chennaiites tracked the black spot on the sun on a hot day
சூரியனை கடந்தது புதன் கோள்!


கடந்த 100 ஆண்டுகளில், சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட பாதையில், புதன் கோள் 12 முறை கடந்துசென்றுள்ளது. இன்று, 13வது முறையாகக் கடக்கும் அரிய நிகழ்வு நடைபெற்றது. சரியாக, மாலை 4.46 மணிக்கு சூரியனுக்கும், பூமிக்கும் இடையே புதன் கோள் கடந்தது. இதைத்தொடர்ந்து, சூரியனை முழுவதுமாக, சுற்றிச் சென்றது.

இதனை பார்ப்பதற்காக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் ஏராளமான மக்கள் திரண்டுவந்திருந்தனர். வெயில் ஒருபுறம் வாட்டி வதைத்தாலும், இத்தகைய நிகழ்வு ஒன்றை நேரில் பார்ப்பது, மகிழ்ச்சி அளிப்பதாக, மக்கள் குறிப்பிட்டனர்.

அடுத்த செய்தி