ஆப்நகரம்

தொடர் பாலியல் துன்புறுத்தல்:மைனர் பெண் தீக்குளிப்பு

தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதால், மனமுடைந்த மைனர் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

TNN 27 Jun 2016, 3:01 pm
தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதால், மனமுடைந்த மைனர் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Samayam Tamil minor girl commited sucide for sexual harassment
தொடர் பாலியல் துன்புறுத்தல்:மைனர் பெண் தீக்குளிப்பு


விருதுநகர் மாவட்டம் துரைசாமிபுரத்தை சேர்ந்த 25 வயதான காட்டு ராஜா என்ற இளைஞர் 15 வயதே ஆன அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து வீட்டில் யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும் அந்த சிறுமியை காட்டு ராஜா மிரட்டியுள்ளார்.இதே போல் பலமுறை அந்த சிறுமியிடம் காட்டு ராஜா தவறாக நடந்து கொண்டுள்ளார்.


ஒரு கட்டத்தில் கட்டு ராஜாவின் தொல்லை தாங்க முடியாத சிறுமி,தன்னுடைய தாய் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர்,அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து காட்டு ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர்,அவனை கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி