ஆப்நகரம்

டெல்லி பூங்காவில் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி!

16 வயது சிறுமி பேகம்பூர் தேசிய பூங்கா அருகில் நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 14 Jun 2017, 7:42 pm
டெல்லி : 16 வயது சிறுமி பேகம்பூர் தேசிய பூங்கா அருகில் நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil minor girl gangraped in delhi park
டெல்லி பூங்காவில் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி!


நேற்று இரவு 9.10 மணிக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி தனது நண்பருடன் பூங்காவில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது பூங்காவிற்கு வந்த நான்கு பேர் அந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர். அதன் பின்னர் நான்கு பேரும் சேர்ந்து அந்தப்பெண்ணை பாலியல் கொடுமை செய்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறைக்கு தெரிவித்தால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டியுள்ளனர். ஆனால் அந்த சிறுமி காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பின்பு அவர் மருத்து பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

சிறுமியின் புகாரை அடுத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி