ஆப்நகரம்

வேலையை விட்டு துரத்திய எச்.ஆர் - கோபத்தில் சுட்டுக் கொன்ற நபர்

மிட்சுபிஷி கார் நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு நீக்கிய கோபத்தில் மனிதவள அலுவலரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Samayam Tamil 7 Jun 2018, 8:05 pm
குர்கான் : மிட்சுபிஷி கார் நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு நீக்கிய கோபத்தில் மனிதவள அலுவலரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
Samayam Tamil mitsubishi


ஹரியானாவில் உள்ள குர்கான், மனிசர் பகுதியில் ஜப்பான் நாட்டு கார் நிறுவனமான மிட்சுபிஷி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலராக (HR) பினேஷ் சர்மா என்பவர் பணியாற்றி வருகிறார்.

நேற்று சிலரை சரியாக வேலை செய்யவில்லை என கூறி பணியிலிருந்து வெளியேற்றியுள்ளார். இதனால் கோபமடைந்த ஒருவர் இன்று காலை 9 மணியளவில் மிட்சுபிஷி நிறுவனத்திற்கு அருகில் காரில் வந்த பினேஷ் சர்மாவை, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் காரை மறித்துள்ளனர். சுதாரித்த பினேஷ் வேகமாக காரில் சென்றுள்ளார். பின் தொடர்ந்த அந்த நபர்கள், துப்பாக்கியால் பினேஷை சுட்டுள்ளனர். இதனால் தலையில் காயமடைந்து மயங்கினார்.

துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பி சென்றுவிட்டனர். அருகில் இருந்தவர்கள் பினேஷை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

துப்பாக்கியால் சுட்ட நபர்களில் ஒருவர், நேற்று வேலையிலிருந்து விரட்டப்பட்ட ஜோகிந்தர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மிட்சுபிஷி நிறுவனம் ஜொகிந்தர் மீது போலீஸில் வழக்கு பதிந்துள்ளது.

சரியாக வேலையை செய்ய வில்லை என சிலரை நேற்று வேலையிலிருந்து பினேஷ் சர்மா நீக்கினார். அதில் ஜோகிந்தர், “என்னையா வேலையிலிருந்து நீக்குகிறாய், உன்னை கொன்று விடுவேன்.” என மிரட்டியுள்ளார். ஆனால் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் பினேஷ் விட்டுவிட்டார்.

இதையடுத்து ஜோகிந்தரை கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி