ஆப்நகரம்

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவரை, அடித்து கொலை செய்த ஊர் மக்கள்

ஜார்கண்ட் மாநிலத்தில், 5 வயது சிறுமியை பாலத்காரம் செய்த நபரை, ஊர் மக்களே அடித்து கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

TNN 22 Apr 2017, 5:11 pm
ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தில், 5 வயது சிறுமியை பாலத்காரம் செய்த நபரை, ஊர் மக்களே அடித்து கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil mob justice jharkhand villager beaten to death for raping five year old girl
5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவரை, அடித்து கொலை செய்த ஊர் மக்கள்


ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியை அடுத்த சுக்சரி கிராமத்தில், ஜவஹர் லோஹர் என்ற 25வயது இளைஞன், அருகில் உள்ள வீட்டின் 5 வயது சிறுமியை, யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று, அதை பல முறை பலாத்காரம் செய்துள்ளார். அந்த குழந்தை படுகாயமடைந்ததோடு, குழந்தை தப்பிச் சென்று விடாமல் இருக்க, அதன் தலையை மண்ணில் புதைத்துள்ளார்.

குழந்தையை காணாமல் தேடிவந்த அவ்வூர் மக்களுக்கு அதிகாலை 3மணிக்கு இந்த விஷயம் தெரியவந்தது. இதையடுத்து, கிராம மக்கள் அந்த இளைஞனை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து கட்டை, பெல்ட்,செருப்பு, கல்லால் ஆக்ரோஷமாக அடித்தனர். இதனால் இளைஞன் சுயநினைவை இழந்தான்.

இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, இளைஞன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. குழந்தையையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய மனித உரிமைகள் அமைப்பு, “இளைஞன், சிறுமியை பலாத்காரம் செய்தது மாபெரும் தவறு. ஆனால் அதற்காக அவர் மரணிக்கும் வரை அடித்து தங்கள் ஆத்திரத்தை கிராம மக்கள் வெளிப்படுத்தியுள்ளது பெரிய குற்றம்.
தண்டனை வழங்கும் செயல் நீதிமன்றத்திற்கு மட்டும் தான் உள்ளது. தனி மனிதரோ அல்லது ஒரு குழுவோ இந்த செயலை கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது.” என தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி