ஆப்நகரம்

தனியாக குளிரில் நடுங்கி கிடந்த நாய் குட்டிக்கு, மடியில் வைத்து உணவு ஊட்டிய குரங்கு

மனிதர்களை விட எங்களுக்கு, அன்பு, பாசம் அதிகம் என குளிரில் நடுங்கிய படி கிடந்த நாய் குட்டிக்கு, மடியில் அமர்த்தில் ஒரு குரங்கு உணவு அளித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

TNN 14 Oct 2017, 4:33 pm
கோவை : மனிதர்களை விட எங்களுக்கு, அன்பு, பாசம் அதிகம் என குளிரில் நடுங்கிய படி கிடந்த நாய் குட்டிக்கு, மடியில் அமர்த்தில் ஒரு குரங்கு உணவு அளித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil monkey food feeding to little dog
தனியாக குளிரில் நடுங்கி கிடந்த நாய் குட்டிக்கு, மடியில் வைத்து உணவு ஊட்டிய குரங்கு


கோவை, பெரியநயாக்கன் பாளையத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு எதிரே ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. இங்கு மலைப்பகுதியிலிருந்து ஏராளமான குரங்குகள் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.

அப்படி இன்று வந்த குரங்குகளில் ஒன்று. புளிய மரத்துக்கு கீழே குளிரில் நடுங்கிய படி கத்திக்கொண்டிருந்த ஒரு குட்டி நாயை, மரத்தின் மேல் எடுத்து சென்று, தன் மடியில் அமர்த்தி, நாயின் தலை, உடலை தடவிக் கொடுத்தது.

அதை ஏராளமான மக்கள் பார்த்து ஆச்சர்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் நாய்க்கு பன் வாங்கி மரத்திற்கு கீழே வைத்தார். அப்போது, நாயை பத்திரமாக ஒரு போர்டின் மேல் வைத்து விட்டு, வேகமாக கீழே வந்த அந்த குரங்கு, பன்னை எடுத்து, நாய்க்கு அருகில் சென்று, பின்னர் அந்த நாயை தன்னுடன் அணைத்துக்கொண்டு, மரத்தின் உச்சிக்கு சென்றது. அங்கு, குரங்கின் மடியில், நாயை அமர்த்தி பன்னை சாப்பிட கொடுத்தது.



மனிதனுக்கு மனிதன் உதவாத காலத்தில், விலங்குகள் தங்களுக்குள் உள்ள பாசப்பிணைப்பை, உணர்த்தும்படியாக இந்த குரங்கு, நாய் உறவு அமைந்துள்ளது.

அடுத்த செய்தி