விருத்தாசலம்: தனியார் மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. அவருடைய மனைவி அமுதாவிற்கு(32) பிரசவ வலி ஏற்பட்டு, ஜங்ஷன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரசவம் பார்க்கப்பட்ட அமுதாவிற்கு, பெண் குழந்தை பிறந்து, சிறிது நேரத்தில் இறந்துள்ளது. இதற்கிடையில் ரத்த கசிவு ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
மருத்துவர்கள் காலதாமதமாக அமுதாவிற்கு சிகிச்சை அளித்ததன் காரணமாகவே, அவர் உயிரிழந்துவிட்டதாக குற்றம்சாட்டினர். தகவலறிந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.
Mother and baby dies in Virudhachalam private hospital.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. அவருடைய மனைவி அமுதாவிற்கு(32) பிரசவ வலி ஏற்பட்டு, ஜங்ஷன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரசவம் பார்க்கப்பட்ட அமுதாவிற்கு, பெண் குழந்தை பிறந்து, சிறிது நேரத்தில் இறந்துள்ளது. இதற்கிடையில் ரத்த கசிவு ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
மருத்துவர்கள் காலதாமதமாக அமுதாவிற்கு சிகிச்சை அளித்ததன் காரணமாகவே, அவர் உயிரிழந்துவிட்டதாக குற்றம்சாட்டினர். தகவலறிந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.
Mother and baby dies in Virudhachalam private hospital.