ஆப்நகரம்

ஆட்டுக்குட்டிக்கு அம்மாவான நாய்!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் ஆட்டுக்குட்டியை நாய் ஒன்று பாலூட்டி வளர்க்கிறது.

TNN 28 Oct 2016, 2:08 pm
சேரன்மகாதேவி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் ஆட்டுக்குட்டியை நாய் ஒன்று பாலூட்டி வளர்க்கிறது.
Samayam Tamil mother dog feeds a lamb in tirunelveli
ஆட்டுக்குட்டிக்கு அம்மாவான நாய்!


நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியை அடுத்த கங்கனாங்குளத்தில் வசிப்பவர் ஜேம்ஸ் முருகபெருமாள். விவசாயம் செய்துவரும் இவர் தனது வீட்டில் பெண் நாய் ஒன்றை கடந்த 2 ஆண்டுகளாக வளர்க்கிறார். இந்த நாய் சில மாதங்களுக்கு குட்டி போட்டிருக்கிறது.

இந்நிலையில், ஜேம்ஸ் தனது உறவினரிடமிருந்து ஆட்டுக்குட்டியை வாங்கிவந்து தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.

ஜேம்ஸின் வீட்டில் உள்ள நாயிடம் அதன் குட்டிகள் பால் குடிக்கும் போது இந்த ஆட்டுக்குட்டியும் அதே நாயிடம் பால்குடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த அதிசயத்தை பார்க்க, ஊர்மக்கள் பலரும் ஜேம்ஸின் வீட்டிற்கு வரத்தொடங்கியுள்ளனர்.

English Summary:

Mother dog feeds a lamb in Tirunelveli

ஆட்டுக்குட்டிக்கு அம்மாவான நாய், ஆடு, ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி, சேரன்மகாதேவி, ஜேம்ஸ் முருகப்பெருமாள், கங்கனாங்குளம், நெல்லை, திருநெல்வேலி, Nellai, Tirunelveli

அடுத்த செய்தி