ஆப்நகரம்

தாய்ப்பால் ஊட்டிய போது விபரீதம்; மின்சாரம் தாக்கி தாயோடு பலியான குழந்தை!

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய போது, மின்சாரம் தாக்கி இருவரும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 23 Oct 2017, 2:15 pm
குர்கான்: குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய போது, மின்சாரம் தாக்கி இருவரும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil mother electrocuted and died with child
தாய்ப்பால் ஊட்டிய போது விபரீதம்; மின்சாரம் தாக்கி தாயோடு பலியான குழந்தை!


குர்கான் வடக்கே பிம்பிசார் தெருவில் வசித்து வந்தவர் பிரியங்கா பாரதி(26). இவர் தனது கணவர், கைக்குழந்தை, 6 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, கணவர் வெளியில் சென்றிருந்த நிலையில், 3வது மாடியில் உள்ள வீட்டின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தார்.

அப்போது தனது குழந்தை பிரின்ஸுக்கு தாய்ப்பால் ஊட்டினார். அப்போது தீபாவளிக்கு போடப்பட்டிருந்த மின்விளக்கில் இருந்து ஜன்னல் கம்பியில் மின்சாரம் பாய்ந்தது. இதனையறியாமல், ஜன்னல் கம்பி மீது பிரியங்கா சாய்ந்தார். இதில் மின்சாரம் தாக்கப்பட்டு, இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதனைக் கண்ட வீட்டிலிருந்த பெண் குழந்தை அலறியது. இதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Mother electrocuted and died with her child.

அடுத்த செய்தி