ஆப்நகரம்

காயமடை குட்டிக் குதிரையை மருத்துவமனைக்கு தூக்கி சென்று காப்பாற்றிய தாய் குதிரை

விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரம் அருகே வாகனம் ஒன்று குதிரை குட்டி மீது மோதி சென்று விட்டது. வாகனம் மோதியதால் குட்டி குதிரை பலத்த காயம் அடைந்ததுடன் வலியால் துடித்தது.

Samayam Tamil 28 Jan 2019, 3:24 pm
விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரம் அருகே வாகனம் ஒன்று குதிரை குட்டி மீது மோதி சென்று விட்டது. வாகனம் மோதியதால் குட்டி குதிரை பலத்த காயம் அடைந்ததுடன் வலியால் துடித்தது.

தன் குழந்தை வலியால் துடிப்பதை கண்ட தாய் குதிரை அதை வாயில் கவ்வியபடி மருத்துவமனைக்கு தூக்கி சென்று வாசலில் போட்டு விட்டு கதறியது. குதிரை அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உதவி ஆய்வாளர் சுப சந்திரன் விரைந்து வந்து குட்டி குதிரையை கால்நடை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவினார்.



குட்டி குதிரையை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு சென்ற போது, பின்னாலேயே கண்ணீருடன் அதன் தாய் குதிரை பின் தொடர்ந்து வந்தது. அதோடு, சிகிச்சை முடிந்த பின்னர் குட்டி குதிரையை அருகிலேயே நின்று கவனித்துக் கொண்டிருந்தது தாய் குதிரை.


குதிரையின் தாய் பாசம் மட்டுமல்லாமல், அதன் புத்திசாளித்தனம் தான் அதன் குட்டிக்கு விரைவாக மருத்துவ சிகிச்சை கிடைக்க காரணமாக அமைந்துள்ளது.

அடுத்த செய்தி