ஆப்நகரம்

இரட்டை குழந்தைகளை அபசகுணமாக கருதி கொன்ற தாய்

ஜார்கண்டில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை அபசகுணமாக கருதி பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 20 Aug 2017, 6:58 pm
ஜார்கண்டில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை அபசகுணமாக கருதி பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil mother kills twins chops off her braid to mislead police
இரட்டை குழந்தைகளை அபசகுணமாக கருதி கொன்ற தாய்




ஜார்கண்ட் மாநிலம் தம்கா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர், தனது ஏழுமாத இரட்டை ஆண் குழந்தையை அபசகுணமாக கருதி தனது வீட்டில் உள்ள கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.

பின்னர், இச்சம்பவத்தை போலீசாருக்கு தெரியாமல் மறைக்க தனது தலைமுடியை கத்திரித்து, வீட்டில் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதையடுத்து சம்பவம் அறிந்து, அப்பெண்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், விசாரணயைில் இந்த பெண் நாடகமாடியது தெரியவந்துள்ளது.

பெற்ற தாயே குழந்தைகளை அபசகுணமாக கருதி கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி