ஆப்நகரம்

சென்னையில் தாய்,மகள் கொலை: மகன் கைது..!

சென்னை சைதாப்பேட்டையில் தாய், மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மகன் கைது செய்யப்பட்டுள்ளான்.

TNN 27 Apr 2017, 8:32 am
சென்னை சைதாப்பேட்டையில் தாய், மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மகன் கைது செய்யப்பட்டுள்ளான்.
Samayam Tamil motherdaughter murdered in chennai son arrested
சென்னையில் தாய்,மகள் கொலை: மகன் கைது..!


சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கே.பிள்ளையார் தெருவில் ஹேமலதா என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பொறியியல் கல்லூரியில் படித்து வரும் ஜெயலட்சுமி என்ற மகளும்,ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பால முருகன் என்று மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு ஹேமலதா மற்றும் அவரது மகள் ஜெயலட்சுமி ஆகியோர் கழுத்தறுக்கப்பட்டு மர்மமான முறையில் பிணமாக வீட்டில் கிடந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ,இருவரின் உடலையும் மீட்டு விசாரணையை தொடங்கினர்.

வீட்டில் நகை,பணம் ஏதும் திருடு போகாததால், இந்த கொலைக்கு வேறு காரணம் இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். மேலும் ஹேமலதாவின் மகன் பால முருகன், வீட்டிற்கு திரும்பாததால் அவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் அதிகரித்தது. அடிக்கடி தனது தாய் மற்றும் தங்கையுடன் பாலமுருகன் சண்டை போடுவார் என அக்கம் பக்கத்தினரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை கேளம்பாக்கம் பகுதியில் பாலமுருகன் தங்கியிருப்பதாக
காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பாலமுருகனை கைது செய்ய காவல்துறையினர் அங்கு சென்ற போது, பாலமுருகன் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் சாமர்த்தியமாக அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கைது செய்து அடுத்தகட்ட விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

தற்போது வரை தனது அம்மா, தங்கையை பாலமுருகன் ஏன் கொலை செய்தார் ?என்பதற்கான காரணம் தெரியவில்லை.

Mother,Daughter murdered in Chennai, son arrested

அடுத்த செய்தி