ஆப்நகரம்

கக்கூஸில் வைத்து கல்வி பயிலும் கிராமக் குழந்தைகள்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கிராம தொடக்கப்பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு கழிப்பறையில் வைத்து வகுப்புகள் நடப்பது அம்பலமாகியுள்ளது.

TNN 31 Jul 2017, 4:56 pm
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கிராம தொடக்கப்பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு கழிப்பறையில் வைத்து வகுப்புகள் நடப்பது அம்பலமாகியுள்ளது.
Samayam Tamil mp no school building teacher says students forced to study in toilet
கக்கூஸில் வைத்து கல்வி பயிலும் கிராமக் குழந்தைகள்


மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மோகாம்புரா கிராமம். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாத நிலை தொடர்கிறது.

இப்பள்ளியில் ஒரு வகுப்பைச் சேர்ந்த 34 குழந்தைகளுக்கு கழிப்பறையில் வைத்து பாடம் நடத்தப்படும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து, அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், முன்பெல்லாம் வகுப்பறை இல்லாத நிலையில் வெட்ட வெளியிலோ மரத்தடியிலோ வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டன. இப்போது மழைக்காலம் என்பதால் எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், கழிப்பறையில் வகுப்பெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ. கைலாஷ் சாவ்லா எந்த பள்ளியிலும் கழிப்பறையில் வைத்து பாடம் நடத்தப்படுவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அடுத்த செய்தி