ஆப்நகரம்

பிறப்புறுப்பில் லத்தியை விட்டு, சிறை காவலர்களால் அடித்தே கொல்லப்பட்ட பெண் கைதி

மும்பையில் உள்ள பெண்கள் சிறையில், ஒரு கைதியை அடித்து சித்தரவதை செய்ததோடு, அவரின் பிறப்புறுப்பில் லத்தியை விட்டதால், ரத்த வெள்ளத்தில் உயிர் பறிபோய் உள்ளது.

TNN 28 Jun 2017, 5:40 am
மும்பை : மும்பையில் உள்ள பெண்கள் சிறையில், ஒரு கைதியை அடித்து சித்தரவதை செய்ததோடு, அவரின் பிறப்புறுப்பில் லத்தியை விட்டதால், ரத்த வெள்ளத்தில் உயிர் பறிபோய் உள்ளது.
Samayam Tamil mumbai jail riots female convict dies after jailors insert lathi into private parts damage lungs
பிறப்புறுப்பில் லத்தியை விட்டு, சிறை காவலர்களால் அடித்தே கொல்லப்பட்ட பெண் கைதி


மும்பையில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் மஞ்சுலா கோவிந்த் செட்டி. இவர் இரு தினங்களுக்கு முன் காலை உணவாக வழங்கப்பட்ட இரண்டு முட்டை, 5 ரொட்டிகள் எனக்கு கிடைக்கவில்லை என சிறை காவலரிடம் முறையிட்டார். இவரின் இந்த கேள்வியால் அவரின் உயிரையே பறித்துவிட்டனர் அந்த சிறைகாவலர்கள்.

ஆம், அவருடன் சிறையில் இருக்கும் சில கைதிகள் சாச்சியத்தின்படி, மஞ்சுலாவை அந்த சிறை காவலர் ஒரு தனி அறைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை அடித்து கொடுமை படுத்தியுள்ளார். அதோடு அங்கு வரவழைக்கப்பட்ட மேலும் சில காவலர்கள், அவரை அடித்துள்ளனர். இதனால் அவரின் உடல் முழுவதும் காயம் அதிகளவில் இருந்தது. அதுமட்டுமில்லாமல், கைதியின் பிறப்புறுப்பில் லத்தியை விட்டு கொடுமை செய்துள்ளனர். அதனால் மஞ்சுலா ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து சிறையில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றத்தில் ஈடுபட்ட சிறை காவலர்கள் மீது வழக்குபதியப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி