ஆப்நகரம்

இருட்டில் பெண்ணிடம் அத்துமீறிய பக்கத்து வீட்டுக்காரர்; கணவர் என ஏமாந்த விபரீதம்

இருட்டில் பெண்ணிடம் அத்துமீறிய பக்கத்துவீட்டுக்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

TNN 26 May 2017, 7:15 pm
மும்பை: இருட்டில் பெண்ணிடம் அத்துமீறிய பக்கத்துவீட்டுக்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil mumbai neighbour rapes woman in the dark she mistakes her husband
இருட்டில் பெண்ணிடம் அத்துமீறிய பக்கத்து வீட்டுக்காரர்; கணவர் என ஏமாந்த விபரீதம்


மகாராஷ்டிர மாநிலம் மும்பை பொவாய் பகுதியில் கடந்த 23ஆம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. அப்போது அங்கிருந்த ஒரு வீட்டின் கதவை இளைஞர் ஒரு தட்டியுள்ளார். இதையடுத்து அந்த வீட்டில் இருந்த பெண் கதவை திறந்துவிட்டு, சரியாக கவனிக்காமல் உள்ளே சென்று படுத்து விட்டார். இதனைத் தொடர்ந்து உள்ளே சென்ற இளைஞர், அப்பெண்ணுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்பெண்ணும் தனது கணவர் என்று நினைத்து, எதுவும் கூறாமல் இருந்துவிட்டார். பின்னர் இருவரும் அப்படியே உறங்கிவிட்டனர்.

இந்நிலையில் காலைப் பொழுது விடிந்தவுடன், அந்த இளைஞர் எழுந்து, தனது ஆடையை அணிந்து கிளம்ப தயாராக இருந்துள்ளார். அப்போது மின்சாரம் வந்துள்ளது. அப்போது இளைஞரை கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்தார். பின்னர் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். இதுகுறித்து பொவாய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் விஷ்ணு மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Mumbai Neighbour rapes woman in the dark she mistakes her husband.

அடுத்த செய்தி