ஆப்நகரம்

தப்பி ஓடி கடுப்பேற்றிய தஷ்வந்த் மீண்டும் கைது!

சிறுமி ஹாசினி மற்றும் பெற்ற தாயையே கொலை செய்த தஷ்வந்த் போலீஸாரிடமிருந்து தப்பிய நிலையில், அவர் மீண்டும் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 8 Dec 2017, 4:06 pm
மும்பை :சிறுமி ஹாசினி மற்றும் பெற்ற தாயையே கொலை செய்த தஷ்வந்த் போலீஸாரிடமிருந்து தப்பிய நிலையில், அவர் மீண்டும் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil mumbai police arrests man accused in hasini rape murder case from mumbai
தப்பி ஓடி கடுப்பேற்றிய தஷ்வந்த் மீண்டும் கைது!


சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் ஹாசினி (6), வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி மாயமானார். இது குறித்து காவல் துறையில் ஹாசினியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தஷ்வந்த் (22) என்பவர் பிடிபட்டார்.

தொடர்ந்து தஷ்வந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹாசினிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்த விஷயம் தெரிய வந்தது. இதன் காரணமாக தஷ்வந்த மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து தஷ்வந்தின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். பின்னர், ஜாமீனில் வெளிவந்த நிலையில், பெற்ற தாயையே 25 பவுன் நகைக்காக கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

இந்த நிலையில், 5 நாட்கள் தலைமறைவாகியிருந்த தஷ்வந்தை மும்பை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக மும்பை பாந்த்ரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை வரும் 9ம் தேதிக்குள் சென்னை ஸ்ரீபெரும்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.



இந்நிலையில், நீதிமன்றத்தில் இருந்து திரும்பி செல்லும் வழியில் கழிவறை செல்ல வேண்டும் என்று கூறி மும்பை விமான நிலையம் அருகில் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அவரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தநிலையில், இன்று மும்பையில் தஷ்வந்த் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான்.

அடுத்த செய்தி