ஆப்நகரம்

அண்ணிக்கு பாலியல் தொல்லை: கொழுந்தன் கொலை

அண்ணனின் மனைவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததைத் தட்டிக்கேட்ட கொழுந்தன் இன்று வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 9 Jul 2017, 12:34 am
அண்ணனின் மனைவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததைத் தட்டிக்கேட்ட கொழுந்தன் இன்று வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil murder near viyasarpadi
அண்ணிக்கு பாலியல் தொல்லை: கொழுந்தன் கொலை


சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சீனிவாசான் . இவர் கூலி தொழிலாளி. இவர் அண்ணன் டீபன் மற்றும் அண்ணி சத்யா உடன் வசதி வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சாம்சான், அவர் தம்பி மார்டின் ஆகியோர் ஸ்டீபன் மனைவி சத்யாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது.

இதனை கொழுந்தன் சீனிவாசன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சீனிவாசன் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சாம்சான், அவர் தம்பி மார்டின் ஆகியோர் நேருவை பட்டப்பகலில் வெட்டி கொலை செய்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திலேயே சீனிவாசன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சீனிவாசன் உடலை பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாம்சான், அவர் தம்பி மார்டின் ஆகியோரை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி