ஆப்நகரம்

இந்து மனைவிக்கு இறுதி மரியாதை; காளி கோவிலில் முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு!

இந்து மனைவிக்கு காளி கோவிலில் இறுதி மரியாதை செலுத்த முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Samayam Tamil 10 Aug 2018, 4:13 pm
டெல்லி: இந்து மனைவிக்கு காளி கோவிலில் இறுதி மரியாதை செலுத்த முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Samayam Tamil Delhi Temple


கொல்கத்தாவைச் சேர்ந்த இம்தியாஸூர் ரஹ்மான், மேற்குவங்க வணிகவரித் துறையில் உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு, இந்து மதத்தைச் சேர்ந்த நிவேதிதா கடாக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இஹினி அம்ப்ரீன் என்ற மகள் இருக்கிறாள்.

திருமணத்திற்கு பின்பும், இருவரும் மதம் மாறவில்லை. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிவேதிதா, கடந்த வாரம் உயிரிழந்தார். அவரது உடல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் டெல்லி சித்தரஞ்சன் பார்க் காளி கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக தனது மகள் பெயரில் ரூ.1,300 செலுத்தி அனுமதி கோரியிருந்தார். இதற்காக கடந்த 6ஆம் தேதி ஒதுக்கப்பட்டு இருந்தது.

பூஜைக்கு சென்ற போது, ரஹ்மான் பெயரைக் கேட்டதும் நிர்வாகிகள் கோவிலுக்கு உள்ளே விடவில்லை. மேலும் பூஜையையும் ரத்து செய்துவிட்டனர். இதுகுறித்து பேசிய கோவில் சொசைட்டி தலைவர் அஷிதவா, ரஹ்மான் தன் அடையாளத்தை மறைத்து, மகளின் பெயரில் அனுமதி கேட்டுள்ளார்.

எனவே அது முஸ்லீம் பெயராகத் தெரியவில்லை. அதனால் அனுமதி கொடுத்தோம். எப்போது அப்பெண் முஸ்லீம் ஆணைத் திருமணம் செய்து கொண்டாரோ அப்போதே இந்து மதத்தில் இருந்து விலகிச் சென்றுவிட்டார். இருப்பினும் அப்பெண்ணின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக அனுமதி கோரினர் எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் தனது உறவினர்களுடன் வந்து கோவிலில் நமாஸ் செய்யத் தொடங்கிவிட்டால் என்ன செய்வது? அதற்கு டெல்லியிலேயே பூஜை செய்யலாமே? எதற்கு டெல்லி வர வேண்டும் என்றனர். இந்நிலையில் தனது விருப்பப்படி பூஜை செய்ய முடியவில்லை என ரஹ்மான் மிகுந்த வேதனை அடைந்தார்.

Muslim man was denied to enter for last rites of his hindu wife in Delhi.

அடுத்த செய்தி