ஆப்நகரம்

முத்தலாக்கை அடுத்து பலதார திருமணத்துக்கும் தடைகோரும் முஸ்லீம் பெண்கள்!

நாடாளுமன்றத்தில் முத்தலாக்கிற்கு எதிரான தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, பலதார திருமணத்தையும் தடைசெய்ய வேண்டும் என்று இஸ்லாமிய பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNN 30 Dec 2017, 4:57 pm
நாடாளுமன்றத்தில் முத்தலாக்கிற்கு எதிரான தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, பலதார திருமணத்தையும் தடைசெய்ய வேண்டும் என்று இஸ்லாமிய பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil muslim women hail triple talaq bill seek ban on polygamy
முத்தலாக்கை அடுத்து பலதார திருமணத்துக்கும் தடைகோரும் முஸ்லீம் பெண்கள்!


முன்று முறை தலாக் என்ற சொல்லைக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறை இஸ்லாமியர்களிடையே வழக்கத்தில் இருந்து வந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின்படி, "இஸ்லாமியப் பெண்கள் திருமணப் பாதுகாப்பு மசோதா" என்ற பெயரில் புதிய சட்ட முன்வரைவை மத்திய அரசு குரல் வாக்குப்பதிவு மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

அதன்படி,‘நேரிலோ, இ-மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப் போன்ற வேறு எந்த தொடர்பு சாதனங்கள் வழியாகவோ முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால், அந்த விவாகரத்து செல்லாது. மேலும் அந்த கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும்.’ என்று இந்த சட்ட முன்வரவு கூறுகிறது.

இந்நிலையில், தற்போது முத்தலாக் மூலம் விவகாரத்து பெறுபவர்களுக்கு வழங்கப்படும் 3 ஆண்டு சிறைத்தண்டனையை 7 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்றும் முத்தலாக் போன்றே இஸ்லாம் சமூகத்தில் காணப்படும் பலதார திருமணத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

அடுத்த செய்தி