ஆப்நகரம்

சாபம் நீங்கி 56 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான மைசூர் இளவரசி-தசராவில் பங்கேற்பு

56 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு தசரா விழாவில் கர்ப்பிணியாக பங்கேற்கும் 3–வது இளவரசி என்ற பெருமையை இளவரசி திரிஷிகா குமாரி பெற்றுள்ளார்.

TNN 1 Oct 2017, 12:07 pm
56 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு தசரா விழாவில் கர்ப்பிணியாக பங்கேற்கும் 3–வது இளவரசி என்ற பெருமையை இளவரசி திரிஷிகா குமாரி பெற்றுள்ளார்.
Samayam Tamil mysore queen participated in dussehra
சாபம் நீங்கி 56 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான மைசூர் இளவரசி-தசராவில் பங்கேற்பு


1600–ம் ஆண்டில் மைசூரை ஆண்ட ராஜ உடையார் என்ற மன்னன், விஜயநகரம் மீது போர் தொடுத்து திருமலா ராஜாவிடம் இருந்து விஜயநகரை கைப்பற்றினான். அதன்பின்னர் தனது படைகளை தலக்காடுவில் உள்ள மாலங்கி கிராமத்திற்கு அனுப்பிய ராஜ உடையார் மாலங்கி கிராமத்தையும் கைப்பற்றினார். அங்கு தான் திருமலா ராஜாவின் மனைவி அலமேலம்மா வாழ்ந்து வந்தார்.

ராஜ உடையாரிடம் சரணடைய மறுத்த அலமேலம்மா, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகவும் அப்போது ராஜ உடையாருக்கு மூன்று சாபங்களை விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. அவை; தலக்காடு மணல்மேடாக மாற வேண்டும், , மாலங்கி ஆற்றில் சுழல் ஏற்பட வேண்டும். மைசூரு அரச குடும்பத்தினருக்கு குழந்தை பாக்கியம் இருக்கக் கூடாது என்பதாகும்.

அன்று முதல் மைசூரு அரச குடும்பத்தில் யாருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. மைசுரு பரம்பரையினர், வாரிசை தத்தெடுத்து முடிசூடி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு, நரசிம்மராஜ உடையாரின் மனைவியும், மைசூர் மகாராணியுமான பிரமோதா தேவி, யதுவீரை தத்தெடுத்து மன்னராக முடிசூடினார். மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கும், ராஜ்கோட் ராஜ குடும்பத்தை சேர்ந்த திரிஷிகா குமாரிக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. . இந்த நிலையில், இளவரசி திரிஷிகா குமாரி கர்ப்பமடைந்தார். இதனால் மன்னர் குடும்பத்தினர் மீதான சாபம் நீங்கியதாக பேசப்படுகிறது.

இதனால், 56 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு தசரா விழாவில் கர்ப்பிணியாக பங்கேற்கும் 3–வது இளவரசி என்ற பெருமையை இளவரசி திரிஷிகா குமாரி பெற்றுள்ளார். முன்னதாக, கடந்த
1890–ம் ஆண்டு மகாராணி வாணி விலாஸ் சன்னிதானா, 1961–ம் ஆண்டு மகாராணி திரிபுரா சுந்தரி அம்மணி ஆகியோர் கர்ப்பிணியாக தசரா விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Mysore queen participated in dussehra .

அடுத்த செய்தி