ஆப்நகரம்

ரூ.4 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்கு, ஹோட்டல் ஊழியரைக் கொன்ற நில புரோக்கர்...!

ரூ.4 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்கு, ஹோட்டல் ஊழியரைக் கொன்ற நில புரோக்கர் கைது செய்யப்பட்டார்.

TNN 28 Jun 2017, 1:08 pm
நாசிக்: ரூ.4 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்கு, ஹோட்டல் ஊழியரைக் கொன்ற நில புரோக்கர் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil nashik man kills restaurant waiter
ரூ.4 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்கு, ஹோட்டல் ஊழியரைக் கொன்ற நில புரோக்கர்...!


மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த நில புரோக்கர் ராம்தாஸ் வாஹ்(39). இவர் தனது பெயரில் ரூ.4 கோடிக்கு இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்துள்ளார். இதையடுத்து அந்த பணத்தை தான் உயிரோடு இருக்கும் போதே பெறுவதற்கு திட்டம் போட்டுள்ளார். இந்த சூழலில் ஹோட்டல் ஊழியர் முபாரக் சந்த் பாஷா என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை சமயம் பார்த்துக் கொன்றுள்ளார். பின்னர் இறந்தது ராம்தாஸ் தான் என்று அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.

இதுகுறித்து போலீசில் விபத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் இன்சூரன்ஸ் பணத்தைப் பெற ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் திடீரென வழக்கின் திசை மாறியது. கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது. விசாரணை தீவிரம் அடைந்த சூழலில், போலீசாருக்கு உண்மை தெரியவந்தது. உடனடியாக தப்பிச் சென்ற ராம்தாஸ் உள்ளிட்ட மூவரைக் கைது செய்தனர். கொலையுண்ட முபாரக், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nashik man kills restaurant waiter to fake own death for 4 crore insurance.

அடுத்த செய்தி