ஆப்நகரம்

பெண்கள் மீதான கொடுமைகள் நடப்பதில் பெங்களூரு 3வது இடம்

பெண்கள் மீதான கொடுமைகள், துன்புறுத்தப்படுதல் அதிகளவில் நடைபெறும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 3வது இடத்தில் உள்ளது.

TNN 17 Sep 2016, 3:59 pm
பெங்களூரு : பெண்கள் மீதான கொடுமைகள், துன்புறுத்தப்படுதல் அதிகளவில் நடைபெறும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 3வது இடத்தில் உள்ளது.
Samayam Tamil ncrb bengaluru 3rd among cities in molestation cases
பெண்கள் மீதான கொடுமைகள் நடப்பதில் பெங்களூரு 3வது இடம்


நாட்டில் பெண்கள் மீதான வன்கொடுமைகள், அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்கள் பெருநகரங்களில் அதிகளவில் உள்ளது. இந்த வரிசையில் தலைநகர் டெல்லி பெண்களுக்கு எதிரான குற்றத்தில் தலைநகரமாக விளங்குகிறது, அதற்கடுத்தாற்போல் மும்பையும், 3வது இடத்தில் பெங்களூரு நகரமும் உள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் தகவலின் படி 2015ம் ஆண்டும் பதிவான பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் 718 புகார்கள் பெங்களூரு நகரில் பதியப்பட்டுள்ளதாகவும், கர்நாடகா முழுவதும் 5,112 புகார்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டெல்லி 4,563 புகார்களும், மும்பையில் 2,008 புகார்களும் பதியப்பட்டு இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளது.

2015ம் ஆண்டு மட்டும் நாடுமுழுவதும் 91,107 புகார்கள் எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் பெண்கள் மீதான குற்றங்களுக்காக பதிவான வழக்குகள் 2,91,247 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், 2015ம் ஆண்டிற்கான வழக்குகள் மட்டும் 66,887 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அலுவலகங்கள், பொது இடங்கள், வாகனங்களில் செல்லும் போது, பேருந்துகளில் செல்லும் போது என எல்லா இடங்களிலும் பெண்கள் மீதான குற்றச்செயல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி