ஆப்நகரம்

இலவச கழுத்து மசாஜால் கோமாவுக்கு சென்ற பரிதாபம்!!

பெங்களூருவில் முடிதிருத்தத்திற்கு சென்றவர் இலவச மசாஜ் செய்து கொள்ள ஆசைப்பட்டு கோமாவுக்கு சென்று திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 12 Jul 2016, 12:31 pm
பெங்களூருவில் முடிதிருத்தத்திற்கு சென்றவர் இலவச மசாஜ் செய்து கொள்ள ஆசைப்பட்டு கோமாவுக்கு சென்று திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil neck massage at salon gives bizman a stroke
இலவச கழுத்து மசாஜால் கோமாவுக்கு சென்ற பரிதாபம்!!


பெங்களூருவைச் சேர்ந்தவர் பாபு ரெட்டி. வயது 40. இவர் கடந்த மே மாதம் வழக்கமாக செல்லும் சலூனில் முடிதிருத்தம் செய்து கொள்ளச் சென்றார். அப்போது, ரூ. 100 கட்டணத்தில் இலவச தலை மற்றும் கழுத்து மசாஜ் செய்யப்படும் என்று கூற சரி என்று ஒப்புக் கொண்டார். சுமார் அரை மணி நேரம் மசாஜ் செய்யப்பட்டது. மசாஜ் செய்யும்போது சடக் என்று கழுத்துப் பகுதியில் எதோ சத்தம் கேட்டுள்ளது. நன்றாக மசாஜ் செய்துள்ளனர், அதனால்தான் அப்படி சத்தம் வருகிறது என்று நினைத்து சென்றுவிட்டார்.

வீட்டுக்கு செல்லும்போது, மயக்கம், சரியாக நடக்க முடியாதது என்று பல அறிகுறிகள் தெரிந்துள்ளது. வீட்டை அடைந்த அடுத்த 48 மணி நேரத்திற்கு சுய நினைவு இல்லை. கொலம்பியா ஆசியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டது.

டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக டாக்டர்கள் செயல்பட்டு மருந்து மற்றும் நரம்புக்குள் ஒரு டியூப் வைத்து சரி செய்தனர். சரியான பயிற்சி இல்லாதவர்கள் கொடுக்கும் இதுபோன்ற மசாஜால் தவறுகள் நேர்கிறது என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பாபு டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், ''10 நாட்கள் எனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது பூரண குணம் அடைந்து விட்டேன். தொடர்ந்து மறுத்து சாப்பிட வேண்டும். போலீசில் புகார் அளிக்கும் நிலையில் நான் இல்லை. நானாக சென்றேன், சலூனை குற்றம் சுமத்த முடியாது'' என்கிறார்.

அடுத்த செய்தி