நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் பங்குபெற சென்ற மாணவிகள் இருவர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
ஜர்னலிசம் படிக்கும் வளர்மதி மற்றும் கண் மருத்துவம் படிக்கும் சுவாதி ஆகிய இரண்டு மாணவிகளும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் மற்றும் மாணவர்கள் போராடி வந்த போது அதற்கு ஆதரவு தெரிவிக்கவும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கோவையில் இருந்து நெடுவாசலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி ரயிலில் பயணம் செய்தனர். சமூக விழிப்புணர்வுக்கான மாணவர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த ஐந்து மாணவர்களுடன், இரு மாணவிகள் பறை மற்றும் பதாகைகளுடன் ரயிலில் பயணம் செய்தனர். பயணத்தின் போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பறை அடித்து பாட்டுப்பாடி, விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு சீட்டுகளை விநியோகித்தபடி பயணம் மேற்கொண்டனர்.
ரயிலில் பயணம் செய்த மாணவ, மாணவிகளை கரூரில் காவல்துறை கைது செய்ய திட்டமிட்டதாகவும், அங்கு பத்திரிகையாளர்கள் இருந்ததால், குளித்தலையில் கைது செய்தனர் என்றும் மாணவர்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜா கூறியுள்ளார். 7 மாணவர்களும் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பொதுமக்களிடையே வன்முறையை தூண்டுகின்றனர் என்று குற்றம் சாட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களை காவல்துறையினர் நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதாக மாணவிகள் தங்களின் வழக்கறிஞர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் குருநாதன், மாணவிகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர்களை நிர்வாணப்படுத்தவில்லை என்றும், துன்புறுத்தவில்லை என்றும், ஏப்ரல் 15ஆம் தேதி கைது செய்யப்பட்ட தினத்தன்றே ரிமாண்ட் செய்துவிட்டதாக கூறியுள்ளார். 3 ஆண்கள் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 2 பெண்கள் திருச்சி பெண்கள் சிறைக்கும், மற்ற இரு ஆண்கள் அரியலூர் பாஸ்டர்ஸ் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் வெளியே வந்த பின்னர் சிறை அதிகாரிகள் மீது வழக்கு பதியப்படும் என்று வழக்கறிஞர் ராஜா கூறினார்.
ஜர்னலிசம் படிக்கும் வளர்மதி மற்றும் கண் மருத்துவம் படிக்கும் சுவாதி ஆகிய இரண்டு மாணவிகளும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் மற்றும் மாணவர்கள் போராடி வந்த போது அதற்கு ஆதரவு தெரிவிக்கவும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கோவையில் இருந்து நெடுவாசலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி ரயிலில் பயணம் செய்தனர். சமூக விழிப்புணர்வுக்கான மாணவர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த ஐந்து மாணவர்களுடன், இரு மாணவிகள் பறை மற்றும் பதாகைகளுடன் ரயிலில் பயணம் செய்தனர். பயணத்தின் போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பறை அடித்து பாட்டுப்பாடி, விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு சீட்டுகளை விநியோகித்தபடி பயணம் மேற்கொண்டனர்.
ரயிலில் பயணம் செய்த மாணவ, மாணவிகளை கரூரில் காவல்துறை கைது செய்ய திட்டமிட்டதாகவும், அங்கு பத்திரிகையாளர்கள் இருந்ததால், குளித்தலையில் கைது செய்தனர் என்றும் மாணவர்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜா கூறியுள்ளார். 7 மாணவர்களும் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பொதுமக்களிடையே வன்முறையை தூண்டுகின்றனர் என்று குற்றம் சாட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களை காவல்துறையினர் நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதாக மாணவிகள் தங்களின் வழக்கறிஞர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் குருநாதன், மாணவிகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர்களை நிர்வாணப்படுத்தவில்லை என்றும், துன்புறுத்தவில்லை என்றும், ஏப்ரல் 15ஆம் தேதி கைது செய்யப்பட்ட தினத்தன்றே ரிமாண்ட் செய்துவிட்டதாக கூறியுள்ளார். 3 ஆண்கள் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 2 பெண்கள் திருச்சி பெண்கள் சிறைக்கும், மற்ற இரு ஆண்கள் அரியலூர் பாஸ்டர்ஸ் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் வெளியே வந்த பின்னர் சிறை அதிகாரிகள் மீது வழக்கு பதியப்படும் என்று வழக்கறிஞர் ராஜா கூறினார்.