ஆப்நகரம்

பசியால் நேர்ந்த கொடுமை; தன் காலையே கடித்து தின்று தீர்த்த நாய்!

கரோலினா: நாய் ஒன்று கடும் பசி காரணமாக தனது காலையே கடித்து தின்றுள்ளது.

Samayam Tamil 9 Dec 2018, 2:54 pm
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் நோவா ஆர்க் மீட்பு குழுவினர் கடந்த மாதம் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் லூக் என்ற பெயருடைய நாய் பசியால் இறக்கும் நிலைக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Dog


இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விலங்குகள் நல வாரியக் குழுவினர் சென்றுள்ளனர். அங்கு ஏராளமான நாய்கள் இருந்தன. அவற்றில் லூக் என்ற நாய் பசிக் கொடுமையால் தனது காலையே கடித்து தின்றுள்ளது.

கடந்த இரு வாரங்களாக உணவின்றி தவித்து வந்துள்ளது. அதன் உரிமையாளர் போதிய உணவு அளிக்கவில்லை. உடனடியாக நாயை மீட்டு உணவு அளித்து பராமரித்து வருகின்றனர்.

லூக்கின் உரிமையாளருக்கு நிச்சயம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. லூக்கிற்கு சிகிச்சை அளித்த பின் மருத்துவர்கள் கூறுகையில், நாயின் உதட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

சுவாசப் பாதையில் இருந்த பிரச்சனையும் தீர்ந்து வருகிறது. தொடர்ந்து மருத்துவக் குழுவினர் லூக்கை கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி