ஆப்நகரம்

கல்யாணமாகி 15 நாளில் ஆண் குழந்தை பெற்றெடுத்த மகராசி! அதிர்ச்சியில் மணமகன்!

ஊத்தங்கரையில், கல்யாணமாகி பதினைந்தே நாளில் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Oct 2018, 1:19 pm
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த அஜீஸ் என்பவருக்கும், பர்வீன் பானு என்பவருக்கும் கடந்த 15நாட்களுக்கு முன் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்றிரவு பர்வீன்பானுவுக்கு திடீரென வயிற்றுவலி அதிமானதாகக் கூறியதையடுத்து அவரை அஜீஸ் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பர்வீன்பானுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என கூறியுள்ளனர்.
Samayam Tamil child


திருமணமான 15வது நாளிலேயே குழந்தை பிறக்கவுள்ளதாக மருத்துவர்கள் கூறியதால்,கடும் அதிர்ச்சியடைந்த அஜீஸ் விரக்தியுடன் மருத்துவமனையை விட்டு சென்றுவிட்டார். இதனிடையே அதிகாலையில் பர்வீன்பானுவுக்கு ஆண்குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தவுடன் பிறப்பை பதிவு செய்து சான்றிதழ் கொடுக்க வேண்டிய சூழலில்,மருத்துவமனையில் இருந்து அஜீஸ் சென்றுவிட்டதால், பர்வீன்பானுவின் உறவினர்களை அழைத்துப் மருத்துவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை மறைத்த பர்வீன்பானு மற்றும் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தது குறித்து காவல்நிலையத்தில் அஜீஸ் புகாரளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்