ஆப்நகரம்

புத்தாண்டு கொண்டாட்டம்:போதையில் மூன்று சர்வர்களுக்கு கத்திக் குத்து..!

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உணவகம் ஒன்றுக்கு வந்த போதை ஆசாமிகள் ,அங்கு பணியாற்றும் மூன்று சர்வர்களை கத்தியால் தாக்கியுள்ளனர்.

TNN 6 Jan 2017, 10:02 am
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உணவகம் ஒன்றுக்கு வந்த போதை ஆசாமிகள் ,அங்கு பணியாற்றும் மூன்று சர்வர்களை கத்தியால் தாக்கியுள்ளனர்.
Samayam Tamil new year celebrationthree waiters stabbed by drunk customers
புத்தாண்டு கொண்டாட்டம்:போதையில் மூன்று சர்வர்களுக்கு கத்திக் குத்து..!


பெங்களூரில் உள்ள பார் மற்றும் ரெஸ்டாரண்ட் அடங்கிய உணவகம் ஒன்றுக்கு புத்தாண்டு தினத்தன்று வந்த மூவர் அதிக அளவு மது அருந்தியுள்ளனர்.மீண்டும் மது கொண்டுவருமாறு சர்வரிடம் ஆர்டர் கொடுத்துள்ளனர்.ஆனால் மது வருவதற்கு சற்று தாமதமாகியுள்ளது.

இதனால் சர்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூவரும்,ஓரு கட்டத்தில் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து அவரது நெஞ்சில் தாக்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து கத்தியால் குத்தப்பட்ட சர்வரை காப்பாற்ற சக பணியாளர்கள் இருவர் அங்கு ஓடி வந்துள்ளனர்.ஆனால் அவர்களையும் அந்த கும்பல் கத்தியால் குத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து கத்தி குத்தில் ஈடுபட்ட மூவரில் இருவரை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

new year celebration:three waiters stabbed by drunk customers

அடுத்த செய்தி