ஆப்நகரம்

பிறந்தது பெண் குழந்தை என்று கூறி, ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டிய மருத்துவர்கள்!

பிறந்த ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டி, கொடூரத்தை மருத்துவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

Samayam Tamil 27 Apr 2018, 5:46 pm
ராஞ்சி: பிறந்த ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டி, கொடூரத்தை மருத்துவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.
Samayam Tamil Pregnant Lady
குழந்தை பாலினம் அறிதல்


ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டம் இத்கோரியில் உள்ள ஜெய் பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர் குடியா தேவி. 8 மாத கர்ப்பிணியான இவர், 110 கிமீ தொலைவில் உள்ள ஓம் கிளினிக்கிற்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

அங்கு அதிகம் பணம் பெற திட்டமிட்ட மருத்துவர்கள், அல்ட்ரா சவுண்ட் சோதனை, அறுவை சிகிச்சை செய்தால் குழந்தையை பிறந்துவிடும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து போலியாக சில சோதனைகள் செய்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

பின்னர் பெண் குழந்தை பிறந்திருப்பதாக பெற்றொரிடம் கூறியுள்ளனர். ஆனால் தேவிக்கு பிறந்தது ஆண் குழந்தை. சிகிச்சை செய்த இரு மருத்துவர்கள் ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டி, பெண் குழந்தையாக மாற்ற நினைத்துள்ளனர்.

ஆனால் குழந்தை இறந்து போய்விட்டது. சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து போய்விட்டதாக கூறிய மருத்துவர்களின் பதிலில், பெற்றோர்கள் திருப்தி அடையவில்லை. உடனே போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு வருவதற்குள் மருத்துவர்கள் தப்பியோடிவிட்டனர். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது பிரிவு 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

மேலும் சத்ரா மாவட்ட சுகாதார ஆய்வாளருக்கு மருத்துவ தாபனச் சட்டம், முன்-கருத்தாய்வு மற்றும் முன்கூட்டி நோய் கண்டறிதல் நுட்பங்கள் (PCPDNT) சட்டம் மற்றும் மருத்துவ பயிற்சி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மாநில சுகாதாரத் துறை செயலர் நிதி காரே உத்தரவிட்டுள்ளார்.

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவது சட்டப்படி குற்றம் என்றும், இதுதொடர்பாக 3 மாதங்களில் கடுமையான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என்றும் காரே தெரிவித்துள்ளார்.

Newborn dies after 'doctors' cut his genitals to prove baby a girl.

அடுத்த செய்தி