ஆப்நகரம்

மதிய உணவில் கிடந்த செத்த எலி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

மதிய உணவில் இறந்த கிடந்த எலியால், அதனை உட்கொண்ட பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

TNN 17 Feb 2017, 8:22 am
டெல்லி: மதிய உணவில் இறந்த கிடந்த எலியால், அதனை உட்கொண்ட பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil nine students at a govt school in delhi hospitalised after had a midday meal
மதிய உணவில் கிடந்த செத்த எலி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி


தலைநகர் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மதிய உணவிற்காக ஏற்பாடுகள் நடைபெற்றன. இதையடுத்து மாணவர்கள் அனைவரும், இடைவேளை நேரத்தில் உணவு உட்கொண்டனர். இந்நிலையில் மாணவர்கள் சிலர் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், மதிய உணவில் எலி ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

குழந்தைகள் நலனில் அக்கறை காட்டாத பள்ளி நிர்வாகிகள் என்று பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். மாணவர்களுக்காக தயாரிக்கப்படும் உணவு குறித்து மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கிரண் வாலியா தெரிவித்துள்ளார். அந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Nine students at a government school in Delhi hospitalised after they consumed a midday meal in which a dead rat was allegedly found.

அடுத்த செய்தி