ஆப்நகரம்

நண்பரின் பர்த்டே பார்டிக்கு போக அனுமதிக்காத பெற்றோர்; மனமுடைந்த இளம்பெண் தற்கொலை!

பர்த்டே பார்டிக்கு போக முடியாத காரணத்தால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Samayam Tamil 17 Mar 2018, 5:05 pm
பெங்களூரு: பர்த்டே பார்டிக்கு போக முடியாத காரணத்தால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
Samayam Tamil not allowed to attend friends birthday party girl ends life
நண்பரின் பர்த்டே பார்டிக்கு போக அனுமதிக்காத பெற்றோர்; மனமுடைந்த இளம்பெண் தற்கொலை!


கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில் உள்ள கேஜி நகரைச் சேர்ந்தவர் அர்பிதா(18). இவர் பி இ எஸ் கல்லூரியில் வர்த்தகம் பயின்று வருகிறார். இவரது தாய் சந்திரிகா டியூசன் நடத்தி கொண்டிருக்கிறார்.

தந்தை சந்திரசேகர் பிளம்பராகவும், டிரைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது நண்பரின் பர்த்டே பார்டிக்கு செல்வதற்கு பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால் தேர்வு நடைபெற்று வருவதால், போக அனுமதிக்க வில்லை. இதனால் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது அறைக்கு திரும்பியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்து கதவை தட்டியுள்ளனர். பின்னர் ஜன்னல் வழியே பார்த்ததில் துப்பட்டாவை பேனில் மாட்டி தூக்கில் தொங்கியுள்ளார்.

உடனே அவரை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Not allowed to attend friend’s birthday party, girl ends life.

அடுத்த செய்தி