ஆப்நகரம்

50க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த 76 வயது முதியவர் கைது

சேலத்தில் 12ம் வகுப்பு மாணவி உட்பட 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த 76 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 15 Feb 2019, 9:58 pm
சேலத்தில் 12ம் வகுப்பு மாணவி உட்பட 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த 76 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil rape


சேலம் மாவட்டம், ஆத்தூர் உடையார் பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். 76 வயதான இவர் வாகன டீலராக உள்ளார். செல்வந்தராக இருக்கும் இவரிடம் 30க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன.

இந்நிலையில் இவரை மிரட்டி பணம் பறிக்க ஒரு கும்பல் முயற்சித்துள்ளது. அவரின் வீட்டில் பணியாற்றி வந்த 12ம் வகுப்பு மாணவியை பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நடராஜனை போஸ்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நடராஜன் மற்றும் அந்த மாணவி ஒன்றாக இருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியானது. அதைப் பார்த்த போலீஸார், நடராஜன் மாணவியின் ஒத்துழைப்புடன் தான் இப்படி செய்துள்ளார் என முடிவுக்கு வந்தனர்.

தொடர்ந்து அந்த மாணவியை விசாரித்ததில், ஒரு கும்பல் தான் தன்னை அவருடன் வேண்டுமென்றே நெருக்கமாக இருக்க செய்தனர். முதியவரிடம் 25 லட்சம் கேட்டு மிரட்டினர் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போலீஸார் விசாரணையில், அந்த முதியவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி