ஆப்நகரம்

தொடரும் பட்டினி சோகம்; ரேஷன் பொருள் கிடைக்காததால் பசியால் இறந்த முதியவர்!

ரேஷன் பொருள் கிடைக்காத காரணத்தால், பசிக் கொடுமை ஏற்பட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

TNN 25 Oct 2017, 2:32 pm
ராஞ்சி: ரேஷன் பொருள் கிடைக்காத காரணத்தால், பசிக் கொடுமை ஏற்பட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil old man dies due to hunger in jharkhand
தொடரும் பட்டினி சோகம்; ரேஷன் பொருள் கிடைக்காததால் பசியால் இறந்த முதியவர்!


ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. ரேஷன் கார்டை ரத்து செய்ததால், உணவுப் பொருள் கிடைக்காமல் கடந்த மாதம் 28ஆம் தேதி 11 வயது சிறுமி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து பாஜிநாத் ரவிதாஸ்(45) என்ற ரிக்‌ஷா தொழிலாளி பட்டினியால் உயிரிழந்தார்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3வது பட்டினிச் சாவு நிகழ்ந்துள்ளது. தியோசா மாவட்டம் தண்டியாரா கிராமத்தைச் சேர்ந்த ருபாலி மாரண்டி(64), இடதுகாலை இழந்தவர். அவரது குடும்பத்திற்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக உணவுப் பொருட்கள் இல்லாமல் தவித்துள்ளார். இதையடுத்து பசி தாங்க முடியாமல் அவர் உயிரிழந்தார். தற்போது ருபாலி வீட்டிற்கு அருகிலுள்ள ஆசிரியர் ஒருவர் தான் உணவு கொடுத்து காப்பாற்றி வருகிறார்.

மத்திய அரசு திட்டங்களால் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர் என்றும், முன்னேற்றம் கண்டனர் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் பாஜக ஆளும் மாநிலத்திலேயே பசிக் கொடுமையால் உயிரிழப்பு நிகழ்வது, மத்திய அரசிற்கு நிச்சயம் அவமானகரமான நிகழ்வாகும்.

Old man dies due to hunger in Jharkhand.

அடுத்த செய்தி