உலகம் முழுவதும் மே 31ம் தேதி (இன்று) உலக புகையிலை தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 1950ம் ஆண்டு முதல் புகை பிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் எடுத்துரைத்து வருகின்றனர். ஆனால் இன்றும் உலகில் புற்றுநோய்க்கு முதல் காரணமாக புகையிலை இருந்து வருகிறது. ஒவ்வொருவரும் புகையிலையின் தீமைகளை அறிந்து அது நம் உடலுக்கு விளைவிக்கும் கேடுகளை புரிந்து கொண்டு இந்த புகைப்படழக்கத்தை நிறுத்த வேண்டும். மனித உயிர் கொல்லும் காரணங்களில் தடுத்து நிறுத்தக் கூடிய ஒன்று புகைப்பிடிப்பது மற்றும் புகையிலை பயன்படுத்துவது. இதன் விளைவாக உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதனை முன்னிட்டு, மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் ஒரிசாவின் பூரி கடற்கரையில், உலக புகையிலை எதிர்ப்பு தின மணல் சிற்பத்தை வரைந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
உலக புகையிலை எதிர்ப்பு தினம்: பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்த சுதர்சன்
உலகம் முழுவதும் மே 31ம் தேதி (இன்று) உலக புகையிலை தினம் கொண்டாடப்படுகிறது.
Samayam Tamil 31 May 2018, 1:01 am
ஹைலைட்ஸ்:
உலகம் முழுவதும் மே 31ம் தேதி (இன்று) உலக புகையிலை தினம் கொண்டாடப்படுகிறது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்