ஆப்நகரம்

விபச்சாரத்திற்கு இண்டர்வியூ வைத்த தடகள வீரர் கைது

சமூக வளைதளங்கள் மூலம் இளம் பெண்களை மயக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சிங்கப்பூர் தடகள வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 20 Jun 2016, 6:50 pm
சமூக வளைதளங்கள் மூலம் இளம் பெண்களை மயக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சிங்கப்பூர் தடகள வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil one armed athlete pleads guilty for recruiting women for prostitition
விபச்சாரத்திற்கு இண்டர்வியூ வைத்த தடகள வீரர் கைது



சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ஆடம் கம்மிஸ், ஒரு பாரா ஒலிம்பிக் வீரர்.பைக் விபத்தில் தனது ஒரு கையை இழந்த அவர், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் சார்பாக கலந்து கொண்டு வந்தார்.இந்நிலையில் 16 வயது இளம்பெண் உட்பட 34 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆடம் கம்மிஸ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


பேஸ்புக்கில் ஏஞ்சல் டேன் என்ற பெயரில் இளம் பெண்களை அணுகியுள்ள கம்மிஸ், தன்னை ஒரு பாலியல் தொழிலாளி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.பின்னர் அந்த பெண்களிடம் தொடர்ந்து பேசி அவர்களின் நம்பிக்கையை பெற்ற கம்மிஸ், ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.இப்படி 16 வயதிற்குட்பட்ட ஒரு பெண் உட்பட 34 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.


பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்ட பெண்களை தன்னுடைய மனைவி இல்லாத போது வீட்டிற்கு வரவைத்து, அவர்களிடம் நேர்காணல் நடத்தியுள்ளார்.மேலும் அவர்களின் உடல் விபச்சாரத்திற்கு ஏற்றதுதானா என ஆய்வு செய்வதாக கூறி அவர்களிடம் செக்ஸ் உறவும் கொண்டுள்ளார்.இவரின் விபச்சார வலையில் பல பள்ளி,கல்லூரி மாணவிகள்,பல் மருத்துமனை ஊழியர்,கிண்டர் கார்டன் ஆசிரியை,கணக்காளர் என பலரும் பணத்திற்கு ஆசைப்பட்டு வீழ்ந்துள்ளனர்.ஆடம் கம்மின்ஸ் மீது 22 பிரிவுகளில் வழக்கு பதவி செய்யப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1,10,000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி