ஆப்நகரம்

டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் மயக்கம்

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயி ஒருவர் திடீரென மயக்கமடைந்தார்.

TNN 29 Mar 2017, 1:29 pm
புதுடெல்லி : டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயி ஒருவர் திடீரென மயக்கமடைந்தார்.
Samayam Tamil one farmer swooning in delhi farmer protest
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் மயக்கம்


டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள், 15 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையில் போராட்டம் நடத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க போராடி வருகின்றனர்.

அரை நிர்வாண போராட்டம், இலை தளைகளை கட்டிகொண்டு, மண்டை ஓடுகளை வைத்துக்கொண்டு என பலவிதங்களில் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



விவசாயிகளை பார்க்கவும், அவர்களுக்கு ஆதரவு தரவந்த சினிமா நடிகர்களுக்கு அப்போதே அமைச்சரை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பல 15 நாட்களாக போராடிவரும் விவசாயிகளை சந்திக்க நேற்று தான் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேரம் ஒதுக்கி, அவர்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்.



இந்நிலையில் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளில் ஒருவர், தற்போது மயக்கமடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி அழைத்து சென்றனர்.

அடுத்த செய்தி