திருச்சி மாவட்டம் அருகே புங்கனூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள புங்கனூர் அருகே இருக்கும் கள்ளிக்குடி பேருந்து நிறுத்தம் அருகே நான்கு ரோடு சந்திப்பு உள்ளது. அந்த சாலையில், மது குமார் (46) என்பவர் இரண்டு பேருடன் பைக் ஒன்றில் வந்துள்ளார். அப்போது அங்கே எதிரே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் மது குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த பவித்ரன் (24) என்பவர் பலத்த காயங்களுடனும், மற்றொரு நபர் சிறு காயங்களுடனும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே, பேருந்து ஓட்டுநர் பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை வளைத்த போது, பேருந்து நிறுத்தத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்த 4 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பினர்.
இதைத் தொடர்ந்து, இந்த விபத்துக் குறித்து ராம்ஜி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள புங்கனூர் அருகே இருக்கும் கள்ளிக்குடி பேருந்து நிறுத்தம் அருகே நான்கு ரோடு சந்திப்பு உள்ளது. அந்த சாலையில், மது குமார் (46) என்பவர் இரண்டு பேருடன் பைக் ஒன்றில் வந்துள்ளார். அப்போது அங்கே எதிரே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் மது குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த பவித்ரன் (24) என்பவர் பலத்த காயங்களுடனும், மற்றொரு நபர் சிறு காயங்களுடனும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே, பேருந்து ஓட்டுநர் பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை வளைத்த போது, பேருந்து நிறுத்தத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்த 4 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பினர்.
இதைத் தொடர்ந்து, இந்த விபத்துக் குறித்து ராம்ஜி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.