ஆப்நகரம்

வெங்காயத்தை முழுங்கியதால் பெண் குழந்தை பலி..!

வெங்காயம் சுவாசப்பாதையில் மாட்டிக் கொண்டதால் ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.

TNN 24 Oct 2016, 1:54 pm
வெங்காயம் சுவாசப்பாதையில் மாட்டிக் கொண்டதால் ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.
Samayam Tamil one year old girl dies in karnataka after swallowing onion
வெங்காயத்தை முழுங்கியதால் பெண் குழந்தை பலி..!


கர்நாடாகவைச் சேர்ந்த கல்பேஷ் மற்றும் அர்ச்சனா தம்பதிகளுக்கு நித்யஸ்ரீ என்ற ஒரு வயது குழந்தை உள்ளது.நேற்று வீட்டின் முற்றத்தில் வெங்காயத்தை காய வைத்திருந்த அர்ச்சனா,மற்ற வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.அப்போது வீட்டிற்குள் விளையாடிய நித்யஸ்ரீ,யாரும் கவனிக்காத நேரத்தில் வீட்டின் முற்றத்தில் காய்ந்து கொண்டிருந்த வெங்காயத்தில் ஒன்றை எடுத்து முழுங்கியுள்ளாள்.

மூச்சுக்குழாயில் வெங்காயம் அடைத்துக் கொண்டாததால்,மூச்சுவிட முடியாத நித்யஸ்ரீ மயக்கமடைந்துள்ளாள்.குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்த அர்ச்சனா,45 நிமிடங்களுக்கு பின்னர் குழந்தை மயக்கமடைந்துள்ளதை அறிந்து,அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளார்.ஆனால் குழந்தையை சோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக ,கொஞ்சம் முன்னர் கொண்டு வந்திருந்தாலும் காப்பாற்றியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் சிறு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை.தயவு கூர்ந்து குழந்தைகளுக்கு எட்டும் இடங்களில் பொருட்களை வைக்காதீர்கள்.குழந்தையை எப்போதும் கவனித்துக் கொண்டே இருங்கள்.

One-year-old girl dies in Karnataka after swallowing onion

அடுத்த செய்தி