ஆப்நகரம்

துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு மரண தண்டனை..!

துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை, கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பாகிஸ்தானில் உள்ள கிராம பஞ்சாயத்தினர் மரண தண்டனை விதித்துள்ளனர்.

TNN 29 May 2017, 2:33 pm
துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை, கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பாகிஸ்தானில் உள்ள கிராம பஞ்சாயத்தினர் மரண தண்டனை விதித்துள்ளனர்.
Samayam Tamil pak woman who alleged rape sentenced to death by panchayat
துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு மரண தண்டனை..!


பாகிஸ்தானின் லாகூர் நகரிலிருந்து 400 கி.மீட்டர் தொலைவில் ராஜன்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் சுமைலா என்ற 19 வயது இளம்பெண், தனது உறவினருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கிராம பஞ்சாயத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த பஞ்சாயத்து உறுப்பினர்கள், அந்த இளம்பெண்ணிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

ஆனால் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டி, தன்னுடைய உறவினர் கற்பழித்ததாக சுமைலா தெரிவித்தார். ஆனால் இதனை பஞ்சாயத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே வேறு வழியில்லாமல் காவல் நிலையத்தில் சுமைலா தஞ்சமடைந்துள்ளார்.

“என்னுடைய உறவினரான கலீல் அகமது என்பவன் நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது, துப்பாக்கி முனையில் என்னை கற்பழித்தான். ஆனால் இதனை பஞ்சாயத்தார் ஏற்று கொள்ளாமல், நான் விரும்பி அகமதுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி தண்டனை அளித்துள்ளனர். மேலும் என்னை சீரழித்த அகமது மீது பஞ்சாயத்தார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என சுமைலா காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

சுமைலாவின் புகார் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவருக்கு மரண தண்டனை விதித்த பஞ்சாயத்து உறுப்பினர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். பாகிஸ்தானில் கிராம பஞ்சாயத்திலேயே மரண தண்டனை அளிப்பது சகஜமான ஒன்றாகும். ஆனால் இதனை தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு எந்த சட்டமும் தற்போது வரை இயற்றவில்லை.

Pak woman, who alleged rape, sentenced to death by 'panchayat'

அடுத்த செய்தி