ஆப்நகரம்

கன்னித்தன்மையில் சந்தேகம்: முதல் இரவில் மனைவி கொலை

முதல் இரவில் மனைவியின் கன்னித்தன்மையில் சந்தேகம் அடைந்து மனைவியை கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 9 Apr 2016, 3:52 pm
முதல் இரவில் மனைவியின் கன்னித்தன்மையில் சந்தேகம் அடைந்து மனைவியை கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil pakistani man kills wife on first wedding night after finding she was not a virgin
கன்னித்தன்மையில் சந்தேகம்: முதல் இரவில் மனைவி கொலை


பாகிஸ்தானில் சிந்த் மாகாணத்தில் உள்ள ஜகோபாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் குலாந்தர் பாக்ஸ் கோகர். வயது 28. இவர் தனது உறவினப் பெண்ணான 19 வயது கசாடி லஷாரி என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். முதல் இரவில் தனது மனைவியின் கன்னித்தன்மையில் சந்தேகமடைந்த கசாடி மனைவியை கொன்றதாக விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த தம்பதிகளிடம் இருந்து மறுநாள் எந்தவித தகவலும் வராததால் சந்தேகம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் மணப்பெண் இறந்து கிடந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

மணப்பெண்ணின் உடலை மீட்டு, தலைமறைவான மணமகனை ஒரே நாளில் போலீசார் கைது விசாரித்து வருகின்றனர். கசாடி மற்றும் அவரது நான்கு சகோதரர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி