ஆப்நகரம்

பழனி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டுயானை பலி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உடல்நலம் பாதிப்பால் அவதிப்பட்ட காட்டுயானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

TNN 14 Oct 2017, 11:26 am
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உடல்நலம் பாதிப்பால் அவதிப்பட்ட காட்டுயானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
Samayam Tamil pazhani little elephant left alone in the forest as the mother elephant dies
பழனி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டுயானை பலி!


பழனியில் கடந்த சில நாட்களாக பெண் யானை ஒன்றும் அதன் குட்டியும் சுற்றித் திரிவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று அங்கே இருக்கும் மாந்தோப்பில் தாய்யானை உடல்நலப்பாதிப்பால் படுத்துக்கொண்டது.

இதனையடுத்து, பொதுமக்கள் வனத்துறையினருக்கு இதைப் பற்றி தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், உடல் நலம் பாதித்த தாய் யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்த போது, குட்டி யானை அவர்களை நெருங்க விடாமல் தடுத்தது. இதனால், வெடி வைத்து குட்டியானையைக் காட்டிற்கு துரத்தினர்.

அதன்பின், தாய்யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி தாய் யானை உயிரிழந்தது. இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pazhani: Little Elephant left alone in the forest as the Mother Elephant dies.

அடுத்த செய்தி