ஆப்நகரம்

மயில் உடலுறவைப் பார்க்க பூங்காவில் அலைமோதும் கூட்டம்!!

மயில்கள் உடலுறவு கொள்ளாது என்று ராஜஸ்தான் நீதிபதி கூறிய மறுநாள் முதல் மயில்கள் உடலுறவு கொள்ளுமா? கொள்ளாதா? என்பதைக் காண பாலக்காட்டில் உள்ள சூலனூர் மயில் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

TOI Contributor 13 Jun 2017, 2:21 pm
மயில்கள் உடலுறவு கொள்ளாது என்று ராஜஸ்தான் நீதிபதி கூறிய மறுநாள் முதல் மயில்கள் உடலுறவு கொள்ளுமா? கொள்ளாதா? என்பதைக் காண பாலக்காட்டில் உள்ள சூலனூர் மயில் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
Samayam Tamil peacocks dont have sex visitors flock kerala peafowl sanctuary to see if rajasthan hc judge was right
மயில் உடலுறவைப் பார்க்க பூங்காவில் அலைமோதும் கூட்டம்!!


மயில்கள் உடலுறவு கொள்ளாது, ஆண் மயிலின் கண்ணீரை குடிப்பதாலேயே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா தெரிவித்து இருந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மயில்கள் உடலுறவு கொள்ளும் என்பதை விளக்கும் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், கேரளாவில் பாலக்காட்டில் உள்ள சூலனூர் பூங்காவில் மயில்கள் உடலுறவு கொள்ளுமா? கொள்ளாதா? என்பதை தெரிந்து கொள்வதற்காக தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆண் மயில் அழுவதால் பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறதா என்பதைப் பார்க்க இந்தக் கூட்டம் வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. முன்பு இந்த பூங்காவுக்கு 10-12 வரை என்று வந்து சென்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது 200-300 வரை அதிகரித்துள்ளது.

இந்தப் பூங்காவில் மூன்று வகையான 300 மயில்கள் உள்ளன. இங்கு வரும் பார்வையாளர்களுக்கு எவ்வாறு மயில்கள் உடலுறவு கொள்ளும் என்பதை பூங்கா பணியாளர்கள் விவரித்து வருகின்றனர்.

Peacocks don't have sex: Visitors flock Kerala peafowl sanctuary to see if Rajasthan HC judge was right

அடுத்த செய்தி