ஆப்நகரம்

நெல்லையில் மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து வழிபாடு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுக்கும் வழிபாட்டை நடத்தினர்.

TNN 24 Jun 2017, 12:35 am
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுக்கும் வழிபாட்டை நடத்தினர்.
Samayam Tamil people offer prayes by eating rainfood
நெல்லையில் மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து வழிபாடு


பருவமழை பொய்த்துப்போனதால் தமிழகம் முழுவதும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. மழை வேண்டி ஆலயங்களில் வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மழை வேண்டி மழைச்சோறு எடுக்கும் பிரார்த்தனையை அவ்வூர் பெண்கள் நடத்தினர். இதற்காக வெள்ளிக்கிழமை இரவு மரத்திடியில் கூடிய பெண்கள் மழை வேண்டி பாடல்கள் பாடினர்.

பின்னர், மழை பொழிந்து வறட்சி நீங்க வேண்டும் என்று பிரார்த்தித்து மழைச்சோறு பகிர்ந்து உண்டனர். இந்த வழிபாட்டில் வள்ளியூரைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு மழைச்சோறு சாப்பிட்டனர்.

அடுத்த செய்தி