ஆப்நகரம்

முட்டை பப்ஸில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டுகள்; நாமக்கல் இனிப்பகத்தில் அதிர்ச்சி சம்பவம்!

முட்டை பப்ஸில் பிளாஸ்டிக் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Mar 2018, 11:08 am
திருச்செங்கோடு: முட்டை பப்ஸில் பிளாஸ்டிக் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil plastics found in egg puffs at namakkal bakery
முட்டை பப்ஸில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டுகள்; நாமக்கல் இனிப்பகத்தில் அதிர்ச்சி சம்பவம்!


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எஸ்.என்.டி சாலையில் தனியாருக்கு சொந்தமான இனிப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு செங்கோடம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், முட்டை பப்ஸ் வாங்கியுள்ளார்.

அதனை சாப்பிடும் போது, பிளாஸ்டிக் துண்டுகள் இருந்ததை உணர்ந்தார். உடனே கடைக்காரரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

அங்கிருந்த முட்டைகள் மற்றும் பப்ஸ்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடை ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

Plastics found in Egg Puffs at Namakkal Bakery.

அடுத்த செய்தி