ஆப்நகரம்

தொடரும் போலிஸ் அராஜகம் : தேங்காய் பாலுக்கு பதிலாக குருமா கொண்டு வந்த ஊழியரை தாக்கிய போலீஸார்

இடியாப்பத்துக்கு தேங்காய் பாலுக்கு பதிலாக குருமா கொண்டு வந்ததால் ஹோட்டல் ஊழியரை மூன்று போலீஸார் தாக்கியுள்ளனர்.

Samayam Tamil 16 Apr 2018, 3:55 pm
தொடரும் போலிஸ் அராஜகம் : தேங்காய் பாலுக்கு பதிலாக குருமா கொண்டு வந்த ஊழியரை தாக்கிய போலீஸார்
Samayam Tamil hotal


சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்ற மூன்று போலீஸார் இடியாப்பமும் தேங்காய்பாலும் ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் ஹோட்டல் ஊழியர் தவறுதலாக இடியாப்பமும், குருமாவும் கொண்டு வந்துள்ளார்.

இதையடுத்து ஊழியரை கண்டபடி திட்டியுள்ளனர். இதை மற்றொரு ஊழியர் வெங்கடேஷன் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் வெங்கடேஷனை சரமாறியாக தாக்கியுள்ளனர். இதை ஹோட்டலில் சாப்பிட்ட ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் அந்த மூன்று போலீஸாரும் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளனர்.
அண்மை காலமாக போலீஸ் பொதுமக்களின் நண்பன் என்ற வாசகம் மறந்து, பல்வேறு அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி