ஆப்நகரம்

சிவகங்கையில் பிரபல ரவுடி சுட்டுக் கொலை

சிவகங்கை மாவட்டத்தில் போலீசாரை தாக்கிய பிரபல ரவுடியை போலீசார் தூப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.

TNN 11 Jan 2017, 1:36 pm
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் போலீசாரை தாக்கிய பிரபல ரவுடியை போலீசார் தூப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.
Samayam Tamil police encounter rowdy in sivagangai
சிவகங்கையில் பிரபல ரவுடி சுட்டுக் கொலை


மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம் நோக்கி கார்த்திகை சாமி தலைமையிலான ஆறுபேர் கொண்ட கும்பல் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் அந்த பங்கில் இருந்த பணத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கிச் சென்றனர்.

இதுதொடர்பாக பெட்ரோல் பங்கைச் சேர்ந்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அப்போது வயர்லெஸ் மூலமாக போலீசார் தொடர்பு கொண்ட வேல்முருகன் என்ற போலீருக்கு தகவல் கொடுத்தனர். அப்பொழு அந்த கும்பலை பிடிக்க முயற்ற வேல்முருகனை தாக்கி அவர்கள் தப்பிச் சென்றார்கள்.

இதனையடுத்து அவர்கள் ஒரு தனியார் தோட்டத்தில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அந்த தோட்டத்திற்கு சென்ற போலீசார் மீது கார்த்திக்கை சாமி உட்பட அந்த கும்பல் போலீசார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார். இதனையடுத்து போலீசார் கார்த்திகைச் செல்வனை சுட்டு கொன்றனர்.

அடுத்த செய்தி