ஆப்நகரம்

15 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கற்பழித்த போலிஸ்காரர்..!

15 வயது சிறுமியை திருமணம் ஆசை காட்டி கற்பழித்ததாக தலைமைக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 10 Mar 2017, 8:42 pm
15 வயது சிறுமியை திருமணம் ஆசை காட்டி கற்பழித்ததாக தலைமைக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil police man arrested for raping minor girl
15 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கற்பழித்த போலிஸ்காரர்..!


கைது செய்யப்பட்டுள்ள தலைமைக் காவலரான மஹபூப் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள காமத்திபுரா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.இவர் கற்பழித்ததாக கூறப்படும் 15 வயது சிறுமிக்கு பெற்றோர்கள் இல்லை.அந்த சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

அந்த சிறுமியின் வீடு,மஹபூப்பின் வீட்டிற்கு அருகில் உள்ளது.இதனை பயன்படுத்திக் கொண்ட மஹபூப்,அடிக்கடி அந்த சிறுமியை தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார்.பின்னர் அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி அடிக்கடி பாலியல் உறவு கொண்டுள்ளார்.சில நாட்களுக்கு முன்னர் இந்த சம்பவம்,அந்த சிறுமியின் அக்காவுக்கு தெரியவந்துள்ளது.அதனைத் தொடர்ந்து அவர் மஹபூப் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.மருத்துவ அறிக்கையில் அவர் கற்பழிக்கப்பட்டது நிரூபணமானால்,மஹபூப் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மஹபூப்பிற்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளன.இவரது மனைவி நீண்ட காலமாக உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Police man arrested for raping minor girl

அடுத்த செய்தி