ஆப்நகரம்

ஒரு மனைவியை இரு ஆண்கள் சொந்தம் கொண்டாடிய வினோதம்: போலீசார் குழப்பம்!

ஒரு மனைவியை இரு ஆண்கள் சொந்தம் கொண்டாடும் சம்பவம் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

TNN 20 Mar 2016, 7:37 pm
ஒரு மனைவியை இரு ஆண்கள் சொந்தம் கொண்டாடும் சம்பவம் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil police were left puzzled when two men showed up claiming one woman as their wife
ஒரு மனைவியை இரு ஆண்கள் சொந்தம் கொண்டாடிய வினோதம்: போலீசார் குழப்பம்!


ஜார்கண்ட் மாநிலத்தில் பிங்கி தேவி மற்றும் அவரது கணவர் லால்டு போஸ் இருவரும் சுனில் சாவ் என்பவரை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

போலீசாரிடம் லால்டு மற்றும் அவரது மனைவி இருவரும் தன்னை அடிப்பதாக புகார் கூறினார். இடைமறித்த பிங்கி தேவி, ரேஷன் கார்டு பெருவதற்காக தன்னுடைய பெயரை மனைவி என்று சுனில் பயன்படுத்தியதாகவும், அதில் இருந்து தன்னை அவரது மனைவி என்று அனைவரிடமும் பிரச்சாரம் செய்து, தனக்கு தொந்திரவு கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

இதை மறுத்துப் பேசிய சுனில், பிங்கி தன்னுடைய மனைவி என்றும், இருவருக்கும் குழந்தை இருப்பதாகவும், தனக்கு கண் பார்வை குறைவு ஏற்பட்ட பின்னர் தன்னை விட்டு பிரிந்துவிட்டதாகவும், ஆவணங்கள் உள்பட தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, மேலும் இரு ஆண்களை திருமணம் செய்து கொண்ட பிங்கி தற்போது மூன்றாவது கணவருடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். இவர் கூறியதில் குழம்பிப் போன போலீசார் தகுந்த ஆதாரங்களை கொண்டு வந்து சமர்ப்பிக்குமாறு கூறி அனுப்பி விட்டனர்.

அடுத்த செய்தி