ஆப்நகரம்

டிக்கெட் வாங்க சொன்ன நடத்துநரை கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்!!

​அரசுப் பேருந்தில் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துநரை பெண் போலீஸ் கனனத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

TNN 18 Sep 2017, 12:00 pm
சென்னை: அரசுப் பேருந்தில் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துநரை பெண் போலீஸ் கனனத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil police woman slapped bus conductor for asking to buy a ticket for her child
டிக்கெட் வாங்க சொன்ன நடத்துநரை கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்!!


ஞாயிற்றுக்கிழமை மதியம் சென்னை குரோம்பேட்டை பேருந்து நிறுத்தத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு மினி பேருந்தில் வித்யா என்ற பெண், குழந்தையுடன் ஏறியுள்ளார். வித்யா தனக்கு மட்டும் பயணச்சீட்டு எடுத்ததால், பேருந்து நடத்துநர் விஜயகுமார் குழந்தைக்கும் சேர்த்து பயணச்சீட்டு எடுக்குமாறு கூறியுள்ளார்.

அதற்கு வித்யா குழந்தைக்கு மூன்று வயதுதான் ஆகிறது என்று மறுத்துவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வித்யா நடத்துநரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து, நடத்துநர் விஜயகுமார் குரோம்பேட்டை போலீஸில் புகாரளித்தார். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், வித்யா கிண்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

Police woman slapped Bus Conductor for asking to buy a ticket for her child.

அடுத்த செய்தி