ஆப்நகரம்

இதுக்கு போலீஸ் வேஷம் தான் கிடைச்சுதா? மதுரை பாட்டியிடம் 8 சவரன் அபேஸ்!

மதுரை: போலீசார் போல வேடமிட்டு, பாட்டியிடம் தங்க நகையை ஏமாற்றிச் சென்றுள்ளனர்.

TIMESOFINDIA.COM 16 Nov 2018, 8:10 pm
மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்தவர் டி.பஞ்சவர்ணம்(62). இவர் நேற்று டிபிகே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட மூவர், தங்களை போலீஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்.
Samayam Tamil Police


அப்பகுதியில் செயின் திருடர்கள் இருப்பதாக கூறியுள்ளனர். எனவே தங்களின் செயின், காதணிகளைக் கொடுத்தால், அவற்றை பேப்பரில் பத்திரப்படுத்தி வைத்து தந்துவிடுவதாக தெரிவித்தனர்.

இதை நம்பிய பாட்டி, செயின் மற்றும் காதணிகளை கழட்டி கொடுத்துள்ளார். இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்ட மூவரும், அதற்குப் பதிலாக கற்களை வைத்துக் கொடுத்துள்ளனர்.

அதை நம்பி வாங்கிக் கொண்ட மூதாட்டி, வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பேப்பரை திறந்து பார்த்ததும், அவற்றில் கற்கள் இருந்ததைக் கண்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று திருடர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி