ஆப்நகரம்

வறுமையின் கோரப்பிடி: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை

வறுமையின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 25 Sep 2016, 12:30 am
சென்னை: வறுமையின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil poverty three members from same family suicide
வறுமையின் கோரப்பிடி: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை


ஜெபகனி, ஜோதி, வேதகிரி ஆகிய மூன்று பேரும் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குடும்பத் தலைவரான ஜெபகனி என்பவர் உடல்நிலை சரியில்லாததால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை.

எனவே குடும்பத்தில் வறுமை சூழல் காரணமாக விரக்தியடைந்த மூன்று பேரும் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். வறுமை சூழ்நிலையால் 3 பேரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்டஇந்தியாவில் தற்கொலைகள் சம்பந்தமான புள்ளி விவரங்களை தனியார் நிறுவனம் ஒன்று அண்மையில் வெளியிட்டது. அதில், தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் சென்னைமுதல் இடத்தில் இருப்பதாக புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. தற்கொலையில் 23.5 சதவீதத்துடன் மாநில அளவில் தமிழகம் முதலிடத்திலும், மாநகர அளவில் சென்னை முதலிடத்திலும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2015-ஆம் ஆண்டு அறிக்கையிலும் தமிழகம் மற்றும் சென்னையே முதலிடம் வகிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் தற்கொலைகள் குறையாமல் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி